Breaking News

ஜனாதிபதி மாலைதீவு விஜயம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாலைதீவிற்கன விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

மாலைதீவின் 50 வது சுதந்திர தின நிகழ்வுகளில் பங்கேற்பதற்காகவே ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

ஜனாதிபதியின் மாலைதீவிற்கான விஜயத்தில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உட்பட சிரேஷ்ட அமைச்சர்கள் சிலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வரவேற்கும் நிகழ்வு நளை மாலை இடம்பெறவுள்ளது. 

மலைதீவிற்கான விஜயத்தினை மேற்கொள்ளும் ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் நாளை மறுதினம் காலை நாடு திரும்பவுள்ளனர்.  இதேவேளை இலங்கைக்கும் மாலைதீவிற்கும் இடையிலன இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு நாளையுடன் 50 ஆண்டுகள் பூர்த்தியாகின்றமை குறிப்பிடத்தக்கது.