Breaking News

பொதும் தேர்தல் தொடர்பில் கலந்துரையாட கூட்டமைப்பு நான்காம் திகதி கூடுகிறது.

இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவு குறித்து, தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்வரும் நான்காம் திகதி தீர்மானிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டமைப்பு தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.பொதுத் தேர்தலுக்கான வேட்புரிமை கோரிய விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.எனினும் தொகுதி பங்கீடு தொடர்பில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற நான்கு கட்சிகளுக்கு இடையில் இன்னும் இனக்கப்பாடு எட்டப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுகிறது.

இந்த நிலையில் எதிர்வரும் நான்காம் திகதியளவில் இது குறித்த இறுதி தீர்மானத்தை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.