Breaking News

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் மார்ச் மாதத்தில்!

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் நடத்தப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (29) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுவதற்கு எவ்வித காரணமும் இல்லையெனவும், அந்தத் தேர்தல் நிச்சயமாக மார்ச் மாதம் நடத்தப்படும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.