Breaking News

அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி பிள்ளைகளினால் ஜனாதிபதிக்கு உருக்கமான மகஜர்

தமிழ் அரசியல் கைதிகளான தமது தந்தையர்களை விடுவிக்கக் கோரி பிள்ளைகளினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு உருக்கமான மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.

யாழ் அரசாங்க செயலகத்தின் முன்னால் இன்று புதன்கிழமை குறித்த அரசியல் கைதிகளின் பிள்ளைகளினால் ஆர்ப்பாட்;டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. ஆர்ப்பாட்டத்தின் முடிவில் வட மாகாண முதலமைச்சர் மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கு மகஜர்கள் கையளிக்கப்பட்டன.

இந்த வகையில் பிள்ளைகள் தமது உள்ளக்கிடக்கைகளை வெளிப்படுத்தி தமத தந்தையர்களை விடுவிக்குமாறு உருக்கமாக வேண்டியுள்ளமை குறிப்படத்தக்கது.