Breaking News

காணிகளை மீள ஒப்படைப்பது குறித்து வடக்கு ஆளுனருடன் ருசெல் பேச்சு


இலங்கைக்கு மேற்கொண்ட பயணத்தின் போது, இராணுவத்தினர் வசமுள்ள நிலங்களை உரிமையாளர்களிடம் மீள ஒப்படைப்பது குறித்து, அமெரிக்காவின் பூகோள பெண்கள் விவகாரங்களுக்கான தூதுவர் கத்தரின் ருசெல்இலங்கை அரச தரப்பினருடன் பேச்சு நடத்தியுள்ளார்.

கத்தரின் ருசெல் அம்மையார் இலங்கைக்கு மேற்கொண்ட இரண்டு நாள் பயணத்தின் போது, நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் சென்றிருந்தார். அங்கு வடக்கு மாகாண ஆளுனர் பாலிஹக்காரவைச் சந்தித்து பேச்சுக்களை நடத்தியிருந்தார்.

இதன்போது, அவர், இலங்கை படையினரால் கைப்பற்றப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளை மீள ஒப்படைத்தல், மற்றும் அரசியல் பொருளாதார விவகாரங்கள் குறித்து முக்கியமாக பேச்சுக்களை நடத்தியுள்ளார்.


இந்த தகவலை இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் வெளியிட்டுள்ளார்.கத்தரின் ருசெல் அம்மையாருடன், அவரும் இந்தச் சந்திப்பில் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.