Breaking News

பிற மாவட்ட மீனவர்களின் அத்துமீறலை நிறுத்துங்கள் : முல்லைத்தீவு மீனவர்கள் கடிதம்



வெளி மாவட்ட மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதால் முல்லைத்தீவு, கொக்கிளாய் மீனவர்கள் பாதிக்கப்படுவதாக கொக்கிளாய் மீனவர்கள் சங்கம் முறைப்பாடு தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட பிரதேச செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசம், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோரிடம் கடிதம் மூலம் தங்களது முறைப்பாட்டை தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கொக்குளாய் கடற்பரப்பிலும் களப்புப் பகுதியிலும், பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அதிகமாக மீன்பிடியில் ஈடுபடுவதன் காரணமாக, நிரந்தரமாக குடியேறி கடற்றொழிலில் ஈடுபடுகின்றவர்கள் தொழிலை இழந்துள்ளனர்.

கொக்குளாய், நாயாறு தொடக்கம் மாத்தளன் ஆகிய பகுதிகள் வரைக்கும், சட்டவிரோதமான மீன்பிடி உபகரணங்களும் பயன்படுத்தப்படுவதாக அந்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.