Breaking News

தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படாவிட்டால் பாரிய பிரச்சினை வெடிக்கும் : ஆனந்தசங்கரி

சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் நாட்டில் பாரிய பிரச்சினைகள் ஏற்படுமென தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி, கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இன்று (திங்கட்கிழமை) முற்பகல் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது, ஊடகங்களிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சிறையிலுள்ள அரசியல் கைதிகளை தற்காலிகமாக புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி அவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென குறிப்பிட்ட அவர், தமிழ் அரசியல் கைதிகள் தாம் செய்த குற்றத்திற்கும் அதிகமாக தண்டனையை தண்டனையை அனுபவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

எனவே, அவர்களின் பிரச்சினை குறித்து ஜனாதிபதி விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால், எதிர்காலத்தில் பாரிய பிரச்சினைகள் ஏற்படுமென அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.