Breaking News

இலங்கை பணிப்பெண் குவைத்தில் மர்மமாக முறையில் கொலை

குவைத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த இலங்கை பெண்ணொருவரின் பிரேத பரிசோதனைகள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் நடாத்தப்பட்டுள்ளன.

இதன்படி, இது கொலை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இந்த பெண்ணில் இரண்டு கைகளும் கட்டப்பட்டு, கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளமை பிரேத பரிசோதனைகளில் உறுதிச் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பெண் மூன்று வருடங்களுக்கு முன்னர் பணிப் பெண்ணாக குவைத்திற்கு சென்றிருந்ததாக உறவினர்கள் கூறியுள்ளனர்.இந்த பெண்ணின் சடலம் மீதான பிரேத பரிசோதனைகள் நேற்று நிறைவடைந்ததை அடுத்து சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம் - கெக்கிராவை பகுதியிலுள்ள 50 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, இந்த சடலத்தை கொண்டு வருவதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தலையீடு செய்ததாகவும், குவைத்திலுள்ள இலங்கை தூதரகத்தின் ஊடாக எதிர்கால நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அமைச்சின் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.