Breaking News

இலங்கையில் முக்கிய ஜனநாயக வெற்றி கிடைத்த ஆண்டு – ஜோன் கெரி

2015ஆம் ஆண்டு இலங்கையிலும் உலகின் ஏனைய சில நாடுகளிலும், மிகவும் முக்கியமான ஜனநாயக வெற்றிகள் கிடைத்திருப்பதாக, அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார்.

2015ஆம் ஆண்டு நிறைவடையும் நிலையில், பொஸ்டன் குளோப் இதழுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே ஜோன் கெரி இவ்வாறு கூறியுள்ளார்.

கொந்தளிப்பும், துன்பங்களும் இருந்த போதிலும், கடினமான பிரச்சினைகளையும் சமாளிக்க உலக சமூகம் ஒன்றிணையும் என்ற நம்பிக்கையைத் தந்த ஆண்டாக 2015 ஆம் ஆண்டு அமைந்திருக்கிறது.

நைஜீரியா, பர்மா, இலங்கை, வெனிசுவேலா உள்ளிட்ட நாடுகளில் மிகவும் முக்கியமான ஜனநாயக வெற்றிகள் கிடைத்திருக்கின்றன.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.