Breaking News

சுமந்திரனுக்கும் எமக்கும் சம்பந்தமில்லை -செல்வம்,சிறீதரன்(காணொளி)

இலங்கையின் 68ஆவது சுதந்திர தின விழாவில்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துகொள்ளவுள்ளதாக அறிய வருகின்றது. இந்நிகழ்வில் எதிர்கட்சித்தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் பங்கேற்பார்களென கூட்டமைப்பின் கொழும்புத் தலைமைகள் உறுதிப்படுத்தியிருக்கின்றது.

இந்த தகவல் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன் மற்றும் ரெலோ அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இது தொடர்பில் கட்சிகூடி எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றும் அவ்வாறு அவர்கள் கலந்துகொள்வார்களானால் அது அவர்களின் தனிப்பட்ட முடிவாகவே அமையும் என்றும் பிரித்தானியாவை தளமாக கொண்டியங்கும் செய்திச்சேவை ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளனர்.