மஹிந்தவை மீண்டும் ஒருமுறை தோற்கடித்த மைத்திரி
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமூக வலைத்தளத்தில் மீண்டும் ஒருமுறை தோற்கடித்து முதல்நிலை வகிக்கின்றார்.
சோஷியல் பெக்கர்ஸ் (Socialbakers) என்ற இணையதளத்தின் ஆய்வுப்படி ஸ்ரீலங்காவிலுள்ள அரசியல்வாதிகளிடையே அதிகமான நண்பர்கள் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமே இருப்பதாக தெரியவந்துள்ளது.
இதற்கமைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முகநூலில் இதுவரை 8 இலட்சத்து 72 ஆயிரத்து 898 பேர் (872 898) நண்பர்களாக உள்ளனர்.அதேவேளை மஹிந்த ராஜபக்சவின் முகநூலில் 8 இலட்சத்து 69 ஆயிரத்து 781 பேர் மாத்திரமே உள்ளனர்.