Breaking News

அமைச்சர்கள் முதலமைச்சர்களுடன் மைத்திரி இன்று சந்திப்பு!

 ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும் அமைச்­சர்கள், இரா­ஜாங்க அமைச்­சர்கள், பிர­தி­ய­மைச்­சர்கள் மற்றும் முத­ல­மைச்­சர்­க­ளுக்கும் இடை­யி­லான முக்­கிய சந்­திப்பு ஒன்று இன்று மாலை ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நடை­பெ­ற­வுள்­ளது.


இந்த சந்­திப்­பின்­போது நாட்டின் அர­சியல் பொரு­ளா­தார வேலைத்­திட்­டங்கள் குறித்து விரி­வாக ஆரா­யப்­ப­ட­வுள்­ளது. குறிப்­பாக எதிர்­வரும் காலங்­களில் அர­சாங்­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்ள வேலைத்­திட்­டங்கள் மற்றும் திட்­ட­மி­டல்கள்

தொடர்பில் இதன்­போது ஜனா­தி­பதி மக்கள் பிர­தி­நி­திகள் மத்­தியில் விசேட உரை­யாற்­றுவார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

அத்­துடன் நாட்டில் தற்­போது ஏற்­பட்­டுள்ள பொரு­ளா­தார நிதி நெருக்­கடி தொடர்­பா­கவும் இந்த நிகழ்வில் கலந்­து­ரை­யா­டப்­ப­ட­வுள்­ளது. அந்­த­வ­கையில் எதிர்­கா­லத்தில் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்ள அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்கள் தொடர்பில் அமைச்­சர்­க­ளி­னதும் முத­ல­மைச்­சர்­க­ளி­னதும் யோச­னை­க­ளையும் கருத்­துக்­க­ளையும் ஜனா­தி­பதி கோருவார் என்றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் இந்த நிகழ்வின் இறு­தியில் அமைச்­சர்கள் இரா­ஜாங்க அமைச்­சர்கள் பிர­தி­ய­மைச்­சர்கள் மற்றும் முத­ல­மைச்­சர்­க­ளுக்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இரா­சப்­போ­சன விருந்­த­ளிக்­க­வுள்ளார்.

அதன்­படி அனை­வ­ரையும் இந்த விசேட கூட்­டத்தில் கலந்­து­கொள்­ளு­மாறு அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது. எவ்­வா­றெ­னினும் ஜனா­தி­ப­தி­யு­ட­னான இந்த சந்­திப்பில் வடக்கு முதல்வர் சி.வி. விக்­கி­னேஸ்­வரன் கலந்துகொள்ளமாட்டார் என்று தெரிவிக்கப்படுகின்றது. சுகவீனமுற்ற நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றதன் காரணமாகவே வடக்கு முதல்வர் இந்த சந்திப்பில் கலந்துகொள்ளமாட்டார் என அறிய முடிகின்றது.