Breaking News

காணி சுவீகரிப்பு உரிமை இராணுவத்துக்கு உண்டு..!!



தேசிய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு காணிகளை சுவீகரிப்பதற்கான உரிமை இராணுவத்துக்கு உள்ளதாகவும், இது தொடர்பில் யாரும் தலையிடத் தேவையில்லையெனவும் தேசாபிமான பிக்குகள் முன்னணியின் செயலாளர் பொங்கமுவே நாலக்க தேரர் தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்துக்கு புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்க எந்தவிதமான தார்மீக உரிமையும் இல்லை. இதனால், கூட்டு எதிர்க் கட்சியினர் இந்த விடயத்துக்கு எந்தவகையிலும் ஒத்துழைப்பு வழங்கக் கூடாது எனவும் நேற்று கொழும்பு பொது நுாலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதும் தேரர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.