Breaking News

சிங்களவர்களை விரட்டியடிக்க வடமாகாண சபை தீவிர முயற்சி

இன்று வடக்கு, கிழக்கு தமிழ் மாநி­லங்கள் கேட்­ப­வர்கள் நாளை வடக்கு, கிழக் கில் உள்ள சிங்­க­ள­வர்களை வெளி­யேற்ற வேண்டும் என்­பார்கள். தவிர்க்க முடியாத நிலையில் வடக்கில் உள்ள சிங்­க­ள­வர்­களை விரட்­டி­ய­டிக்க முயற்­சி­பார்கள். வடக்கில் மீண்டும் பயங்­க­ர­வாத போக்கை ஆரம்பித்து விட்­டனர் என பாரா­ளு­ மன்ற உறுப்­பி­னரும் முன்னாள் பாது­காப்பு தரப்பு ஊடகப் பேச்­சா­ள­ரு­மான கெஹெ­லிய ரம்­புக்­வெல தெரி­வித்தார்.

வட­மா­காண சபையின் நகர்­வு­களும், புலம்­பெயர் அமைப்­பு­களின் செயற் பா­டு­களும் இன்று வடக்கில் அச்­சு­றுத்தலை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன. ஆகவே வடக்கில் மீண்டும் இரா­ணுவ பாது­காப்பை பலப்­படுத்த வேண்­டிய காலம் வந்­துள்­ளது எனவும் அவர் குறிப்­பிட்டார்.

தமிழ் மக்கள் வாழும் வடக்கு கிழக்கு மாகா­ணங்கள் ஒரு மாநி­ல­மா­கவும் சிங்­கள மக்கள் வாழும் ஏனைய மாகா­ணங்கள் இன்­னொரு மாநி­ல­மா­கவும் பிர­க­டனம் செய்­யப்­பட வேண்டும் என வட­மா­காண முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்­துள்ள நிலையில் இது தொடர்பில் பொது எதி­ர­ணியின் நிலைப்­பாட்டை கொழும்பு ஊடகம் ஒன்று வின­வி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறு­கையில்,

நல்­லாட்சி அர­சாங்கம் நாட்டில் ஜன­நா­ய­கத்­தையும் சமா­தா­னத்­தையும் பலப்­ப­டுத்­துவோம் என்ற பெயரில் நாட்டில் பிரி­வி­னையை தூண்டி வரு­கின்­றது. எந்த சந்­தர்ப்­பத்­திலும் வடக்கு மாகாணம் நாட்டில் பிரி­வினை வாதத்தின் பக்­கமே தொடர்ச்­சி­யாக செயற்­பட்டு வரு­கின்­றது. வட­மா­காண முத­ல­மைச்­சரும் வட­மா­காண சபை­யி­னரும் எப்­போ­துமே நாட்டை துண்­டாடும் நிலைப்­பாட்டில் தான் உள்­ளனர். இப்­போது வட­மா­காண முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வ­ரனின் கருத்­து­களும் வட­மா­காண சபையின் தீர்வு திட்­டங்­களும் மீண்டும் நாட்டில் போராட்­டத்தை உரு­வாக்கும் வகை­யி­லேயே அமைந்­துள்­ளன.

தனி தமிழ் பிராந்­தி­யங்­களும் தனி சிங்­கள பிராந்­தி­யங்­களும் நாட்டில் அமைக்­கப்­ப­டு­மாயின் நாட்டில் சிங்­கள தமிழ் உற­விலும் பாரிய விரிசல் நிலைமை ஏற்­படும். அது மாத்­திரம் இன்றி வடக்கு பகு­தி­க­ளுக்கு சிங்­கள மக்கள் செல்­லவோ அல்­லது வடக்கில் சிங்­கள மக்கள் வாழவோ முடி­யாத நிலைமை ஏற்­படும். இப்­போது இருக்கும் சிங்­கள மக்­க­ளையும் வடக்கில் இருந்து வெளி­யேற்ற இவர்கள் அடுத்­த­கட்ட நட­வ­டிக்கை எடுப்­பார்கள். தவிர்க்கும் பட்­சத்தில் சிங்­க­ள­வர்­களை விரட்­டி­ய­டிக்­கவும் தயங்­க­மாட்­டார்கள். இவ்­வா­றன நிலை­மை­யினால் மீண்டும் நாட்டில் பாரிய குழப்­பங்­களும் போராட்­டங்­களும் ஏற்­படும்.

வட­மா­காண சபையின் இந்த செயற்­பாடு குறித்தும் முத­ல­மைச்­சரின் கருத்து தொடர்­பிலும் இப்­போது அர­சாங்கம் என்ன செய்­யப்­போ­கின்­றது. எவ்­வா­றான பதிலை முன்­வைக்­கப்­போ­கின்­றது என்­பதே எமது கேள்­வி­யாகும். எவ்­வாறு இரு­பினும் இன்று நாடு மிகவும் மோச­மான நிலைக்கு தள்­ளப்­பட்டு வரு­கின்­றது. எமது அர­சாங்கம் வென்­றெ­டுத்த தேசிய ஐக்­கி­யத்­தையும், பாது­காப்­பையும் இந்த அர­சாங்கம் முழு­மை­யாக சீர­ழித்து விட்­டது. தேசிய பாது­காப்பில் பாரிய சந்­தேகம் எழுந்­துள்­ளது. 

வடக்கில் மீண்டும் புலி­களின் ஆதிக்கம் தலை­தூக்கி வரு­கின்­றது. கொழும்­பிலும் புலி­களின் சீரு­டைகள் கண்­டெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. இந்த நிலை­மையை பார்க்­கும்­போது மீண்டும் நாட்டின் தேசிய பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. ஆகவே வடக்கில் மீண்டும் இராணுவ பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய காலம் வந்துள்ளது. வடமாகாண சபையின் நகர்வுகளும், புலம்பெயர் அமைப்புகளின் செயற்பாடுகளும் இன்று வடக்கில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளன என்றார்.