எம்.பி.க்களின் எண்ணிக்கையை 245 ஆக அதிகரிக்க பரிந்துரை
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 240 அல்லது 245 ஆக அதிகரிக்கும் நோக்கில் தேர்தல் முறை மாற்றம் குறித்த யோசனை மாதிரி திட்டங்கள் அரசியலமைப்பு நிர்ணய சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் அதற்காக பாராளுமன்றம் அரசியலமைப்பு நிர்ணய சபையாக மாற்றப்பட்டுள்ளது. புதிய அரசியலமைப்பை உருவாக்கும் செயற்பாட்டில் தேர்தல் முறை மாற்றம் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.
அந்தவகையிலேயே அரசியலமைப்பு நிர்ணய சபைக்கு தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் நான்கு யோசனை திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் தற்போதைய எண்ணிக்கையான 225 எம்.பி.க்களில் மாற்றம் இல்லாத வகையில் இரண்டு யோசனைகளும், எம்.பி. க்களின் எண்ணிக்கையை 240 ஆக உயர்த்த வேண்டுமென்ற உயர்த்த வேண்டுமென்ற ஒரு யோசனையும், 245 ஆக உயர்த்தப்பட வேண்டுமென்ற மற்றுமொரு யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளன.








