Breaking News

முஸ்லிம்கள் பொறுமையாக இருக்க பழகிக் கொள்ள வேண்டும்- ஹக்கீம்



கிழக்கு மாகாண முதலமைச்சர் அவரது பொறுமையைப் பேணிக் கொள்ள வேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் கிண்ணியாவில் தெரிவித்துள்ளார்.

கடற்படை வீரரை திட்டியமைக்காக முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும். இதுபோன்ற நடவடிக்கையினால் இனவாதிகளுக்கும், சந்தர்ப்பவாதிகளுக்கும் சந்தர்ப்பம் அளிக்கக் கூடாது.

வங்குரோத்து அரசியல் சக்திகள் மீண்டும் எழுச்சி பெற இடமளிக்கக் கூடாது. முஸ்லிம் மக்கள் பொறுமையைக் கைக்கொள்ள வேண்டும். பொறுமை இல்லாது போனால் நீண்ட பயணம் செல்ல முடியாது போகும் எனவும் அமைச்சர் கிண்ணியாவில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும் போது குறிப்பிட்டுள்ளார்.