Breaking News

சராவின் வீட்டில் மைத்திரிக்கு விருந்து- (படங்கள்)

இன்று யாழ்வந்த ஜெனாதிபதி மைத்திரிபால
சிறிசேனவுக்கு த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் திரு சரவணபவன் வீட்டில் விருந்து வழங்கப்பட்டுள்ளது.

இன்றையதினம் துரையப்பா விளையாட்டரங்கினை திறந்துவைக்கும் நோக்குடன் யாழ்ப்பாணம் வந்திருந்த மைத்திரிபால சிறிசேன அந்த நிகழ்வின் பின்னர் த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவனின் மகளின் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வில் கலந்துகொண்டிருக்கின்றார்.

இந்த நிகழ்வு முன்னரே ஒழுங்கு செய்யப்பட்டு இருந்ததாகவும் அதன்போது தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா அவர்களும்  யாழ்மாவட்ட சுதந்திரகட்சி அமைப்பாளர் ஐங்கஜன் ராமநாதன் அவர்களும் கலந்து சிறப்பித்ததோடு அவர்களுக்கான விருந்துபசாரமும் இடம்பெற்றுள்ளதாக கிங்டத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

மயிலிட்டியை 12 ஆம் திகதிக்குள் விடுவிக்காவிடின் மக்கள் போராட்டம் வெடிக்கும் என கூறிய மாவை இன்றைய தினம் ஜனாதிபதி மீள்குடியேற்றம் பற்றி மௌனம் காட்டியிருந்தபோதும் ஜனாதிபதியுடன் தனிப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டிருப்பது போராட்டத்தை எதிர்பார்த்திருந்த மக்களுக்கு பலத்த ஏமாற்றத்தை கொடுத்திருப்பதாக தெரியவருகின்றது.