Breaking News

போர்க்குற்ற விசாரணை தேவையில்லை-சயந்தன்(காணொளி)

போர்க்குற்ற விசாரணை தொடர்பில் முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன்
அவர்களால் தொடர்ந்தும் வலியுறுத்தப்பட்டுவரும்வேளை இன்றைய சபை அமர்விலும் அதனை வலியுறுத்தி பேசிய கலாநிதி சர்வேஸ்வரனை இடைமறித்து பேசிய வடமாகாணசபை உறுப்பினரும் முதலமைச்சருக்கு தொடர்ந்தும் நெருக்கடி கொடுத்துவரும் குழுவின் தலைவரும் சுமந்திரனின் வலதுகரமுமான வடமாகாணசபை உறுப்பினர் கேசவன் சயந்தன் அவர்கள் தனதுரையில் தெரிவித்திருக்கின்றார்.

அவர் தனதுரையில் போர்க்குற்ற விசாரணை இடம்பெறவேண்டுமென முதலமைச்சர் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றார் அதுபோல இவரும் பேசிவருகின்றார் ஆனால் போர்க்குற்ற விசாரணையை கோரிக்கொண்டிருந்தால் பலஆண்டுகள் நாம் காத்திருக்க வேண்டிவரும் எனவே அதனை விடுத்து அரசியல் தீர்வொன்றை பெறுவதற்கான முயற்சியில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என அவர் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.



முக்கியமான செய்திகளை அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்