Breaking News

குமரன் பத்மநாதனின் வெளிநாடு செல்வதற்கான தடை நீடிப்பு



தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கியஸ்தரான கே.பி. என அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் வெளிநாடு செல்வதற்கான தடையை எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதிவரை நீடிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தினால் கே.பி.யை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடுமாறு கோரி, குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் குறித்த மனு தொடர்பான விசாரணை இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.