அய்யோ! இந்த நாட்டின் ஊடக சுதந்திரம் – மஹிந்த
அய்யோ ! நாட்டில் ஊடக சுதந்திரம் திருப்திகரமாக உள்ளது. கொஞ்சம் பிசகினாலும் அச்சுறுத்தல் விடுத்து ஊடக நிறுவனத்துக்கு கடிதம் செல்கின்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
அரசாங்கம் சி.எஸ்.என். ஊடகத்தைத் தடை செய்தது. இது ஊடக சுதந்திரம். அண்மையில், தெரண தொலைக்காட்சி சேவை, நிகழ்ச்சியொன்றை அரசாங்கத்துக்கு எதிராக ஒளிபரப்பியதாக தெரிவித்து ஊடக அமைச்சினால் காரணம் கேட்டு கடிதம் அனுப்பப்படுகின்றது. இது ஊடக சுதந்திரம்.
இவையனைத்தையும் பார்க்கும் போது ஊடக சுதந்திரம் என்பது இந்த நாட்டில் இல்லையென்றெ கூற வேண்டும் எனவும் அவர் கூறினார்.








