Breaking News

அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்யுங்கள்- சாந்தி கோரிக்கை



மலரவுள்ள புத்தாண்டிலாவது பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்ய நல்லாட்சி அரசாங்கம் முன்வர வேண்டுமென்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராஜா வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் துன்பங்களை அனுபவித்து வருவதாக தெரிவித்த அவர். தம்மை கட்டம் கட்டமாக விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அரசியல் கைதிகள் வலியுறுத்துவதாக குறிப்பிட்டார்.

எனவே அரசியல் கைதிகளை விடுதலை செய்ய ஜனாதிபதியும், பிரதமரும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.