Breaking News

சிலை திறக்க சென்ற சிவமோகனிடம் வாக்குவாதம்(காணொளி)

மல்லாவியில் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகனின்
பாராளுமன்ற நிதியில் அமைக்கப்பட்ட பண்டாரவன்னியன் சிலை தொடர்பில் நேற்றுமுதல் கருத்துமுரண்பாடுகள் ஏற்பட்டிருந்தது.

அமைக்கப்பட்ட பண்ணடாரவன்னியன் சிலையில் மன்னன் வைத்திருக்கும் வாள் தொடர்பிலும் அவரது கண்கள் ஐயனாரின் கண்கள் போன்றும் அகன்றிருப்பதோடு அவர் வைத்திருக்கும் கேடயம் பின்நோக்கிய திசையிலும் காணப்படுவதோடு ஒட்டுமொத்தமாக ஒரு நோய்வாய்ப்பட்டவருடைய தோற்றமுடையதாக சிலை காணப்படுவதாக தெரிவித்து அப்பகுதி இளைஞர்கள் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர் என தமிழ்க்கிங்டொத்தின் விசேட செய்தியாளர் தெரிவிக்கின்றார்.



அந்த எதிர்ப்புக்களை கருத்தில் கொள்ளாத பாராளுமன்ற உறுப்பினர் பொலீஸ் பாதுகாப்போடு அதனை தான் திட்டமிட்டபடி திறந்துவைக்க முற்பட்டபோது ஒரு இளைஞர் இத்தகைய எதிர்ப்புக்கள் உள்ளது நீங்கள் இந்த சிலை திறப்பதற்கும் எதிர்ப்புள்ளது எனவே காரணத்தை கூறி அதனை திறக்குமாறு கேட்டிருந்தார் அதற்கு பதிலளித்த சிவமோகன் தான் தனது தலைமைஉரையில் அவற்றை தெரிவிப்பதாக சொல்லி இளைஞர்களை சமாதானப்படுத்தி ஒருவாறு நிகழ்வை நடாத்தி முடித்ததோடு அதற்கான தன்னிலை விளக்கத்தையும் சிவமோகன் வழங்கியிருந்தார்.




முக்கியமான செய்திகளை அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்