Breaking News

நீ உருப்படமாட்டாய் என அதிபர் திட்டியதே என்னைச் சாதிக்கத் தூண்டியது!



உயிரியல் தொழிநுட்ப பிாிவில் மாவட்ட மட்டத்தில் முதல் நிலையை பெற்றவா் கிளிநொச்சி இந்துக் கல்லூரி மாணவன் மகேந்திரன் தார்த்திக்கரன். இவா் கிளிநொச்சி உருததி்ரபுரம் எள்ளுக்காடு எனும் மிகவும் பின்தங்கிய பிரதேசத்தை சேர்ந்தவா். இவரது தந்தை ஒரு கூலித்தொழிலாளி. அத்துடன் இவர் தனது படிப்பைத் தொடர்வதற்காக இன்னொரு வேலைசெய்தே படித்துவந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தான் ஆரம்ப கல்வி கற்ற பாடசாலையில் எள்ளுகாட்டில் இருந்து செல்பவா்களை ஏளனமாகவே பாா்ப்பது வழமை எள்ளுக்காட்டில் உள்ளவா்கள் படிக்கத் தெரியாதவா்கள் என்றெல்லாம் கூறுவாா்கள்.

க.பொ.த சாதாரனதரம் பரீட்சை எழுதிவிட்டு உயிரியல் தொழிநுட்ப பிாிவில் உயா்தரம் கற்பதற்காக இந்துக் கல்லூரிக்கு செல்வதற்காக வெளிக்கிட்ட போது அதிபா் நீ உருப்பட மாட்டாய் என்றுக் கூறியே அனுப்பி வைத்தாா். என கண்கள் கலங்க தெரிவித்துள்ளார். அதுவே எனக்கு சவாலாக அமைந்தது ஆனாலும் அது எனக்கு இன்னமும் வலிக்கிறது இதே போல் யாரையும் திட்டாதீர்கள் என கண்ணீருடன் கேட்டுக்கொண்டார்.