வட மாகாணம் முழுவதும் 27 ஆம் திகதி ஹர்த்தால்
முல்லைத்தீவில் விமானப்படையின் வசமுள்ள 538 ஏக்கர் காணி உட்பட வடக்கிலுள்ள இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பதனை இலக்காகக் கொண்டு வடக்கிலுள்ள அரசியல்வாதிகளும், சிவில் அமைப்புக்களும் எதிர்வரும் 27 ஆம் திகதி வட மாகாணம் முழுவதிலும் அமுலுக்கு வரும் வகையில் ஹர்த்தால் ஒன்றை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.