Breaking News

சுமந்திரன் வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு(காணொளி)


ஜெனீவா விவகாரம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய
விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற மற்றும் மகாணசபை உறுப்பினர்களுக்கிடையிலான கூட்டம் வவுனியாவில் நடைபெறுவதற்காக அதில் சுமந்திரன் கலந்துகொள்வதை முன்னிட்டு வெளியிலும் கூட்டமை நடைபெறவிருந்த மண்டபத்திலும் விசேட அதிரடிப்படையினர் துருவித்துருவி சோதனைகளை மேற்கொண்டு எந்த பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை என உறுதிப்படுத்திய பின்னரே சுமந்திரன் கூட்டத்திற்கு வருவதற்கான செய்தி அனுப்பப்பட்டதாகவும் அதன்பின்னரே அவர் வருகை தந்நதாகவும் அங்குள்ள தமிழ்கிங்டொத்தின் ஊடகவியலாளர் தெரிவிக்கின்றார்.

கடுமையான சோதனைகள் மேற்கொண்ட அதிரடிப்படையினர் அங்கிருந்த பூச்சாடியொன்றிலிருந்து பற்றி எறியப்பட்ட நிலையிலிருந்த சிகரெட் துண்டுஒன்றை மீட்டெடுத்ததாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.









வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருவில் உள்ள வன்னி இன் விருந்தினர் விடுதியில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்று வருகிறது.

கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னதாக ஊடகவியலாளர்களுக்கு மண்டபத்திற்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்ட அதேவேளை, கூட்டம் ஆரம்பமாகியதும் ஊடகவியலாளர்கள் மண்டபத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்