Breaking News

முள்ளிவாய்க்கல் நினைவேந்தல் நிகழ்வு! மதகுரு ஒருவரிடம் 2 மணி நேரம் விசாரணை



முள்ளிவாய்க்கல் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பில் கிறிஸ்தவ மதகுரு ஒருவரிடம் இரண்டு மணித்தியாலங்கள் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

ராஜன் அருட் தந்தையிடம் இவ்வாறு நேற்று இரண்டு மணித்தியாலங்கள் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்காலில் போரில் உயிர்நீத்த 500 மக்களின் பெயர்களை உள்ளடக்கி நினைவுத் தூபி அமைக்கத் திட்டமிட்டமை குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் பெயர்களை நினைவுத் தூபியொன்றில் பொறிக்கும் முனைப்புக்களில் அருட்தந்தை ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தி விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இந்த நினைவுத் தூபி இன்று நிறுவப்படவிருந்தது என பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப் பெற்றிருந்தது.