Breaking News

வாகரையில் துயரம் ; ஒரே குடும்பத்தில் நால்வர் தொடர் மரணம்



ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவர் ஏற்கனவே பாம்பு தீண்டி உயிரிழந்துள்ள நிலையில் சகோதரன் திடீர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

இந்த துயரம் தாங்காது மூத்த சகோதரன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் வாகரைப் பிரதேசத்தை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. 

மட்டக்களப்பு வாகரை 5ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த தெய்வேந்திரன் லோகிதராணி தம்பதியினரின் குடும்பத்திற்கே இந்த தொடர்ச்சியான துயரம் இடம்பெற்று வந்துள்ளது.

குறித்த குடும்பத்தின் இரண்டாவது மகளான 16 வயதுடைய மோகனராணி கடந்த 1996 ஆம் ஆண்டுபாம்பு தீண்டி உயிரிழந்தார்.

அதன் பின்னர் அவரது தங்கையான ஷர்மிகா 2001 ஆம் ஆண்டு பாம்பு தீண்டி உயிரிழந்தார்.

இவ்வாறான நிலையில் கடந்த 8 ஆம் திகதி தெய்வேந்திரன் லோகிதன் மாடு மேய்க்கச் சென்ற நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டார்.

இதனையடுத்து அவரது மூத்த சகோதரன் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவங்கள் தொடர்பில் வாகரைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

ஓரே குடும்பத்தில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான உயிரிழப்புக்கள் வாகரைப் பிரதேசத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.