Breaking News

முதல்வருக்கு ஆதரவாக கிளிநொச்சியில் போராட்டம்



நீதிக்காக ஒன்றிணையுங்கள் எனும் தொனிப்பொருளில் வட. மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவான போராட்டம் கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அநீதிக்கு எதிரான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் போராட்டத்தில் குற்றவாளிகள் நீதிமானை தண்டிப்பதா?, பதவி ஆசையே நம்பிக்கை இல்லா பிரேரணை, பதவிக்காக ஆளுநரிடம் சரணடைந்ததா தமிழரசு கட்சி போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கியவாறு பொதுமக்கள் கோஷமெழுப்பி வருகின்றனர்.

மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் முதலமைச்சராக தெரிவுசெய்யப்பட்ட சி.வி.க்கு எதிராக தமிழரசு கட்சி சார்பில் ஆளுநரிடம் நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில் மக்களின் அதிருப்தி வட. மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்களாக வெடித்துள்ளது.