Breaking News

குற்றச்சாட்டுக்களுக்கு அமைச்சரவையே பொறுப்பு!

தன் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு வடக்கு மாகாண அமைச்சரவையே பொறுப்புக்கூற வேண்டுமென மாகாண கல்வியமைச்சர் த.குருகுலராசா குறிப்பிட்டுள்ளார்.


வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து விவாதிப்பதற்கென, இன்று (புதன்கிழமை) நடைபெறும் விசேட அமர்வில் உரையாற்றிய குருகுலராசா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமது அமைச்சின் கீழ் செயற்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் யாவும் அமைச்சரவையின் முடிவுக்கு இணங்கவே செயற்படுத்தப்பட்டதாக குறிப்பிட்ட குருகுலராசா, தற்போது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் யாவும் கூட்டுப்பொறுப்புள்ள குற்றச்சாட்டுக்கள் எனவும் அமைச்சரவைக்கும் அதில் பொறுப்புண்டு எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, குற்றஞ்சாட்டப்பட்ட அமைச்சர்களை இன்றைய தினம் தன்னிலை விளக்கம் வழங்குமாறு கோரப்பட்ட போதிலும், அதனை எழுத்து மூலமாக முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு கையளித்துள்ளதால் சபையில் விளக்கமளிக்க வேண்டிய அவசியம் இல்லையென்றும் குருகுலராசா குறிப்பிட்டுள்ளார்.