32 இலங்கையர்களை சிறப்பு விமானத்தில் நாடு கடத்தியது பல்கேரியா - THAMILKINGDOM 32 இலங்கையர்களை சிறப்பு விமானத்தில் நாடு கடத்தியது பல்கேரியா - THAMILKINGDOM

  • Latest News

    32 இலங்கையர்களை சிறப்பு விமானத்தில் நாடு கடத்தியது பல்கேரியா



    பல்கேரியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 32 இலங்கையர்கள் சிறப்பு விமானம் மூலம் கொழும்புக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

    32 பல்கேரிய குடிவரவு அதிகாரிகளின் பாதுகாப்புடன், நேற்று முன்தினம் 32 இலங்கையர்களும் சிறப்பு விமானம் ஒன்றில் கொழும்புக்கு நாடு கடத்தப்பட்டிருந்தனர்.

    இத்தாலிக்கு அழைத்துச் செல்வதாக ஆட்கடத்தல் முகவர்களால் இவர்கள் அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.

    துருக்கியில் முகவர்களால் கைவிடப்பட்ட நிலையில், இத்தாலியில் நுழைய முடியும் என்ற நம்பிக்கையில் இவர்கள் பல்கேரியாவுக்குள் பிரவேசித்திருந்த போதே, அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

    பல்கேரிய அதிகாரிகளால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட 32 இலங்கையர்களையும் பொறுப்பேற்ற சிறிலங்கா குடிவரவு அதிகாரிகள், அவர்கள் அனைவரையும் புலனாய்வுப் பிரிவினரிடம் கையளித்தனர்.
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: 32 இலங்கையர்களை சிறப்பு விமானத்தில் நாடு கடத்தியது பல்கேரியா Rating: 5 Reviewed By: Tamilkingdom
    Scroll to Top