Breaking News

தனது உரையை நிரூபித்தால் பதவி துறப்பேன் – மலையக மக்களுக்கு சிறிதரன் பிரச்சாரம்!



மலையக மக்களை பிரதேச ரீதியில் ஒடுக்கும் வகையில், அவர்களை கீழ்த் தரமான சொற் பிரயோகத்தால் தான் திட்டியதும் நிரூபிக்கப்பட்டால் தான் மலையக மக்களுக்கு முன்னிலையிலேயே பதவி விலகுவேன் என சிறிதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி குணாவில் பகுதியில் நேற்று மலையக மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடல் ஒன்றை நிகழ்த்தியபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், நீங்கள் என்னுடைய அந்த ஒலிப்பதிவைக் கேட்டால் தெரியும். அதில் எந்தளவுக்கு குரலை வெட்டி இடையூறுகள் செய்யப்பட்டு அந்த ஒலிப்பதிவு வெளியிடப்பட்டுள்ளது.

நான் எந்தவொரு ஊடகத்திலையோ மலையக மக்களை தாழ்த்தியோ, கீழ்த்தரமாகவோ கதைக்கவில்லை.

அப்படி நான் கதைத்ததை நீங்கள் உறுதிப்படுத்தினால் உங்கள் முன்னிலையில் நான் பதவி துறப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.