Breaking News

கேணல் ராயு அவர்களின் 15ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்

25-08-2017 கேணல் ராயு அவர்களின் நினைவலைகளில்.... 


தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் வளர்ச்சிக்குப் பெருந்துணையாக நின்ற இத்த ளபதி 25-08-2002 அன்று வீரச்சாவடைந்தார். விடு தலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைப் புலிகள் நிகழ்த்திய இமாலயச் சாதனைகள் பல வற்றின் பின்னால் ராயு அண்ணாவின் வெளிக் கொணராத  செயற்பாடுகள் பல உள்ளன. 

கேணல் ராயு அண்ணாவின் இறுதி வணக்க நிகழ்வில் தமிழீழத் தேசியத் தலைவரும், தளபதிகளும், போராளிகளும் பெரும்தொகை யான மக்களும் அஞ்சலி செலுத்திய கேணல் ராயு அண்ணாவின் வித்துடலை முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்ட நிகழ்வை காணொளியில் காணலாம். தமிழீழ தாயக விடுதலைக்காகவும் தமிழீழ மக்களின் விடிவுக்காகவும் களம்பல களங்களில் களமாடி பல போராளிகளை வளர்த்தெடுத்து வெற்றியை அள்ளி தந்த எங்கள் அண்ணன் கேணல் ராயுவிற்கு எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றோம். 

இதே நாளில் வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களுக்கும் எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.