Breaking News

நிறை­வ­டைந்தது ஜெனிவா கூட்டத் தொடர்



இலங்­கையின் மனித உரிமை நிலைமை தொடர்­பான பல்­வேறு சர்ச்­சை­யான அறி­விப்­புக்கள் சல­ச­லப்­பான கூட்­டங்­க­ளுடன் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 36 ஆவது கூட்டத் தொடர் நேற்­றுடன் நிறை­வ­டைந்­தது. 

இலங்கை தொடர்­பான விவா­தங்கள் எதுவும் உத்­தி­யோ­க­பூர்­வ­மான முறையில் இம்­முறை கூட்டத் தொடர் நிகழ்ச்சி நிரலில் இடம்­பெ­றா­வி­டினும் உத்­தி­யோ­க­பூர்­வ­மற்ற முறை யில் பல்­வேறு அறி­விப்­புகள் இடம்­பெற்­ற­துடன் இலங்கை தொடர்­பான 15 க்கும் மேற்­பட்ட உப­குழுக் கூட்­டங்­களும் நடை­பெற்­றன. 

முதல்நாள் அமர்வில் உரை­யாற்­றிய ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசேன் இலங்கை தொடர்பில் அதி­ருப்தி வெ ளியிட்­டி­ருந்தார். 

இலங்கை அர­சாங்கம் காணா­மல்­போனோர் தொடர்­பான அலு­வ­ல­கத்தை உட­ன­டி­யாக நிறு­வ­வேண்டும் என்று அர­சாங்­கத்தை வலி­யு­றுத்­து­கின்றேன். அது­மட்­டு­மன்றி மக்­க­ளுக்­கி­டையில் நம்­பிக்­கையை கட்­டி­யெ­ழுப்பும் வேலைத்­திட்­டங்­க­ளையும் அர­சாங்கம் உட­ன­டி­யாக முன்­னெ­டுக்­க­வேண்டும் என்று ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசேன் தெரி­வித்­தி­ருந்தார். 

மேலும் இரா­ணு­வத்­தினால் கைய­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள காணி­களை உட­ன­டி­யாக விடு­விக்­க­வேண்டும். பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்­தினால் பதி­வு­செய்­யப்­பட்­டுள்ள வழக்­கு­களை உட­ன­டி­யாக தீர்க்­க­வேண்டும். இந்த வழக்­குகள் நீண்­ட­கா­ல­மாக தேங்­கிக்­கி­டக்­கின்­றன. அது­மட்­டு­மன்றி பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை உட­ன­டி­யாக நீக்­க­வேண்டும் அதற்குப் பதி­லாக கொண்­டு­வ­ரப்­படும் சட்­ட­மா­னது சர்­வ­தேச தரத்­திற்கு அமை­வாக இருக்­க­வேண்டும் எனவும் அல் ஹுசேன் வலி­யு­றுத்­தி­யி­ருந்தார். 

அத்­துடன் இலங்­கை­யா­னது சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்டம், மற்றும் சர்­வ­தேச மனித உரிமை சட்­டங்கள் மீறப்­பட்­ட­தாக கூறப்­படும் விட­யத்தில் நம்­ப­க­ர­மான பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை முன்­னெ­டுக்­கா­விடின் இந்த விவ­காரம் சர்­வ­தேச நியா­யா­திக்­கத்தை நோக்கிப் பய­ணிக்கும் என்றும் அவர் குறிப்­பிட்­டி­ருந்தார். 

இதே­வேளை இலங்கை தொடர்­பாக 15 க்கும் மேற்­பட்ட உப­குழுக் கூட்­டங்­களும் இம்­முறை ஜெனிவா கூட்டத் தொடரில் நடை­பெற்­றன. இந்தக் கூட்­டங்­கங்­களில் இலங்­கையின் சார்­பிலும் புலம்­பெயர் அமைப்­புக்­களின் சார்­பிலும் பிர­தி­நி­திகள் உரை­யாற்­றி­யி­ருந்­தனர். 

மேலும் தமி­ழ­கத்தின் ம.தி.மு.க. கட்­சியின் பிர­தி­நி­தி­யான வைகோவும் இம்­முறை ஜெனி­வா­வுக்கு சென்று உப­குழுக் கூட்­டங்­களில் இலங்கை தொடர்பாக உரையாற்றியிருந்தார். இது இவ்வாறு இருக்க ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடர் அடுத்தவருடம் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ளது. இதன்போது இலங்கை தொடர்பாக நான்கு அல்லது ஐந்து அறிக்கைகள் தாக்கல் செய்யப்படவுள்ளன.