Breaking News

யார் முதலமைச்சரானாலும் எதையும் சாதிக்க முடியாதாம்- பொ.ஐங்கரநேசன்!

வடக்கு மாகாணசபையின் ஆயுட்கால முடிவிற்கு ஒரு வருடகாலம் இருக்கை யிலே அடுத்த முதலமைச்சருக்காக யாரை நியமிப்பதென பேச எத்தணித்து ள்ளார்கள். 

யாரும் முதலமைச்சராகலாம்.   தற்போது ள்ள அரசியலமைப்பின் கீழ் பெரிதாக எத னையும் சாதித்துவிட முடியாதென முன்  னாள் விவசாய அமைச்சரும் வடமா காண சபை உறுப்பினருமான பொ.ஐங்கரநேசன் குறிப்பிட்டுள்ளார். உடுப்பிட்டி வீரகத்தி விநாயகர் சனசமூக நிலையத்தின் பவள விழாவும் புதிய கட்டிடத்திறப்பு விழாவும் கடந்த சனிக்கிழமை (28.10.2017) இடம்பெற்ற இந்நிக ழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து உரையா ற்றியபோது பொ.ஐங்கர நேசன் குறிப்பிட்டுள்ளார். 

மேலும்  உரையாற்றுகையில், ஒவ்வொரு மாகாணசபை உறுப்பினருக்கும் ஒவ்வொரு வருடமும் 60 இலட்சம் ரூபா குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியாக ஒதுக்கப்படுகிறது. 

இந்நிதியில் இருந்துதான் கட்டுமான உதவிகளைக் கேட்டுவரும் சனசமூக நிலையங்களுக்கும் வாழ்வாதாரம் கேட்டுவரும் பொதுமக்களுக்கும் உத விகளை வழங்கி வருகின்றோம்.  

ஆனால், குறைந்தளவு நிதியில் உதவி கோருபவர்களின் தேவையை முழுமையாக எங்களால் நிறைவே ற்ற முடியாமல் உள்ளது. அது மாத்திரம் அல்ல,  குறைந்தளவு தொகையை க்கூட நாங்கள் விரும்பியதுபோன்று எங்களால் வழங்க முடியவில்லை.

எனக்கான நிதி ஒதுக்கீட்டில் இருந்து ஒரு மாணவிக்கு 15 ஆயிரம் ரூபா பெறும தியான ஒரு துவிச்சக்கர வண்டியை வழங்கியிருந்தேன். அந்த மாணவியின் வறுமை நிலையை எடுத்துக்கூறி அவருக்கு உதவி செய்யுமாறு கிராம சேவை யாளர் ஒருவர் எனக்குப் பரிந்துரைக் கடிதம் அனுப்பியிருந்தார். 

ஆனால், அந்த மாணவி நன்றாகப் படிக்கும் மாணவி என்று அதிபரின் பரி ந்துரை இல்லாமல் நான் துவிச்சக்கர வண்டியை வழங்கியது தவறு என்று கணக்காய்வுக்குழு எங்களிடம் விளக்கம் கேட்டது, பாடசாலையில் வழங்க ப்படும் மதிய உணவு தான் வறிய அந்த மாணவிக்கு ஒருநாளில் கிடைக்கக்கூ டிய சத்துணவு. 

பாடசாலை சென்றால்தான் ஒருவேளை உணவுதன்னும் அந்த மாணவிக்குக் கிடைக்கும். அதனால்தான் நான் அந்த மாணவிக்கு துவிச்சக்கரவண்டியை வழங்கினேன். 

வடக்கு மாகாணசபையின் கையாலாகாத நிலையை விளக்குவதற்கு இந்த ஒரு உதாரணமே போதும். மத்திய அரசாங்கத்தின் சுற்று நிருபத்துக்குச் சேவ கம் செய்யும் ஊழியர்களாகவே முன்னாள், இன்னாள் அமைச்சர்கள் எல்லோ ரும் உள்ளோமே தவிர, சுயமாக நாம் எதனையும் செய்ய முடியாதவர்களா கவே உள்ளோம். 

மேலும் எங்கள் சக்திக்கு மீறிப் பல பணிகளை நாங்கள் முன்னெடுத்திருக்கி றோம். இதனைப் புரிந்து கொள்ளாமல், அல்லது புரிந்தும் புரியாதது போல் அரசியல் காரணங்களுக்காக வடக்கு மாகாணசபை வினைத்திறன் அற்றது என்ற குற்றச்சாட்டுளைப் பலர் முன்வைத்து வருகிறார்கள். 

வடக்கு மாகாணசபை சுயாதீனமாகத் தொழிற்டக்கூடியவாறு அதற்கான அதி காரங்கள் வழங்கப்படாதவரை மாகாணசபையால் சிறப்பாக இயங்க முடி யாது. முதலமைச்சர், அமைச்சர்கள் எல்லோரும் பெயரளவுக்குத்தான் என்பது தான் யதார்த்தம் எனத்  தெரிவித்துள்ளார்.