Breaking News

தேசியக் கொடி விடயமாக வடக்கு முதலமைச்சரிடம் விளக்கம் கோரிய - ஆளுனர்!

வடமாகாண கல்வி அமைச்சர் தேசிய கொடியினை புறக்கணித்த விடயம் தொடர்பாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் வடமா காண ஆளுநர் ரெஜினோல்ட் விளக்கம் கோரியுள்ளார். 

இவ்விடயமாக இன்று வடமாகாண முதலமை ச்சரிடம் கடிதம் மூலம் இந்த விளக்கத்தினை ஆளு நர் கோரியுள்ளார். முதலமைச்சரினால் பரிந்துரை க்கப்பட்டவர் தம்ம முன்னிலையில் இலங்கையின் அரசியலமைப்பிற்கு கட்டுப்படுவதாக சத்தியப்பிர மாணம் செய்துள்ளார் என அக்கடிதத்தில் நிரூபனமாகியுள்ளது. இந்நிலையில் அண்மையில் சிங்கள பாடசாலை ஒன்றில் தேசியக்கொடி தொடர்பில் அவர் நடந்த செயற்பாடு தொடர்பாக அமைச்சரவை தலைவர் என்ற ரீதியில் விளக்க மளிக்குமாறு அக் கடிதத்தில் கோரப்பட்டுள்ளது. 

மேலும் இச் சம்பவம் தொடர்பான சில ஆவணங்களும்  முதலமைச்சருக்கு ஆளுநரினால் இன்று (23) மதியம் பதிவுத் தபால் மூலமாக அனுப்பி வைக்க ப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.