Breaking News

அரசிடம் உள்­ளூ­ராட்­சி சபைகளின் அதிகாரங்களை ஒப்­ப­டைப்­பதில் குற்றச்சாட்டு - விமல் வீரவன்ச!

நாட்டின் நிர்­வா­கத்­தினை முறை­யாக பரி­பா­லனம் செய்ய முடி­யாத தேசிய அர­சாங்­கத்­திடம் உள்­ளூ­ராட்சி சபை­களின் அதி­கா­ரங்களை ஒப்­ப­டைப்­பது அபா ­ய­க­ர­மா­ன­தொரு செயற்­பாடு என தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலைவர் விமல் வீர­வன்ச குற்றம் சாட்டியுள்ளார். 


தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் கட்சி அலு­வ­ல­கத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை நடைபெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரி­விக்­கை­யிலே அவர் மேற்­கண்­ட­வாறுத் தெரி­வித்தார். 


 மேலும் தெரிவிக்கையில்......... 

தற்­போது உள்­ளூ­ராட்சி சபை தேர்­த­லுக்­கான பிர­சா­ரங்கள் நாட­ளா­விய ரீதியில் இடம்பெற்று வரு­கின்­றது. நாட்டின் பிர­தான இரு கட்­சி­களும் உள்­ளூராட்சி தேர்­தலில் வெற்றி பெறு­வ­தாக மக்கள் மத்­தியில் கருத்­துக்­களை முன்­னி­லைப்­ப­டுத்தி வரு­கின்­றன. நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கு மக்கள் மத்­தியில் வெறுப்­புக்­களே அதி­க­ரித்து காணப்­ப­டு­கின்­றன. கடந்த இரண்டு ஆண்டு கால­மாக நாட்டில் பல வித­மான பிரச்­சி­னை­க­ளுக்கு பொது மக்கள் முகம் கொடுத்து ள்ளனர்.  

பெற்றோல் தட்­டுப்­பாடு, ரயில் போக்­கு­வ­ரத்து ஊழி­யர்­க­ளது வேலை நிறுத்தப் போராட்டம் போன்­ற­வற்றில் பொது­மக்கள் பெரிதும் பாதிக்­கப்­பட்­டனர். மஹி ந்த ராஜ­பக் ஷவின் ஆட்சிக் காலத்தில் 350ரூபா­வாக காணப்­பட்ட உரம் நல்­லாட்சி அர­சாங்­கத்தின் நிர்­வா­கத்தில் 2500 ரூபா­வாக விலை அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. 

மக்­களின் வாழ்க்கை செல­வுகள் நாளுக்கு நாள் அதி­க­ரித்த வண்­ணமே காணப்­ப­டு­கின்­றன. விவ­சா­யத்­திற்கு தேவை­யான உரத்­தினை இறக்­கு­மதி செய்­வதில் சூழ்ச்­சிகள் இடம் பெற்று வரு­கின்­றன. இலங்­கையில் வழ­மை­யாக இறக்­கு­மதி செய்­யப்­ப­டு­கின்ற உரத்­திற்கு பதி­லாக புதிய வகை உரம் இறக்­கு­மதி செய்­யப்­ப­ட­வுள்­ளது. 

இலங்­கையின் விவ­சா­யத்­திற்கு பாவிக்­கப்­படும் உரத்தின் தன்­மை­யுடன் ஒப்­பி­டு­கையில் இதன் தரம் மேல­தி­க­மா­னது என விவ­சாய திணைக்­களம் அறி­வித்தும் 76000மெற்றிக் தொன் உரம் இறக்­கு­மதி செய்­யப்­ப­ட­வுள்­ளமை தேவை­யற்ற செயற்படாகும். 

இதற்கு நிதி அமைச்சு அனு­மதி வழங்க மறுத்­த­போதும் அமைச்­சரவையை அவ­ச­ர­மாக கூட்டி இறக்­கு­ம­திக்­கான அனு­ம­தியை பெற்­றுக்­கொண்­டமை நிதி­ய­மைச்சின் பல­வீனத் தன்­மை­யினை வெளிப்­ப­டுத்­து­கின்­றது.

குறிப்­பிட்ட உரம் இறக்­கு­மதி செய்­யப்­படும் பொழுது அதன் விலையில் மாற்றம் ஏற்­படும் அதி­க­மான விலை­யினை நிர்­ண­யிக்கும் பொழுது சாதா­ரண விவ­சாயிக­ளுக்கு கொள்­வ­னவு செய்­ய­மு­டி­யாத நிலைமை உரு­வாகும் இதன் கார­ண­மாக விவ­சா­யிகள் பெரிதும் பாதிக்­கப்­ப­டுவர் இதுவா நல்­லாட்சி.? 

 ஜன­வரி மாதத்தின் இறு­தியில் குறிப்­பிட்ட உரவகைகள் இறக்­கு­மதி செய்­யப்­ப­டு­மாயின் நாட்டில் விவ­சா­யத்­துறை பெரிதும் பாதிக்­கப்­ப­டு­வதால் அதன் தாக்கம் நேர­டி­யாக விவ­சாய குடும்­பங்­க­ளையே சேரும். இவ்­வா­றான பிரச்­சி­னை­களின் மத்­தி­யிலே நல்­லாட்சி அர­சாங்கம் நிர்­வா­கத்­தினை மேற்கொண்டு வரு­கின்­றது. பிரச்சினைகளின் தீர்விற்கு வழங்கப்படுகின்ற வாக்குறுதிகள் வெறுமனே வாக்குறுதிகளாகவே காணப்படுகின்றன. 

இதனடிப்படையில் உள்ளூராட்சி அதிகாரங்களும் தேசிய அரசாங்கத்தின் பொறுப்பின் கீழ் சென்றால் நாட்டின் எதிர்காலமும் தனிமனித வாழ்வும் மிக அபாயகரமானதாக மாறுவது நிச்சயம். இதற்கான மாற்று நடவடிக்கை மக்க ளிடமே உள்ளதெனத் தெரிவித்துள்ளார்.