Breaking News

அவசரமாக அதிகாலையில் இந்தியாவிற்குச் சென்றார் - மஹிந்த ராஜபக்ஷ.!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவசரமாக இந்தியாவுக்கான பயண த்தை மேற்கொண்டுள்ளார். கட்டுநாயக்க சர்வதேவ விமான நிலையத்தின் ஊடாக  இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இந்தியா நோக்கிச்  சென்று ள்ளார். 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுடன் நாடாளுமன்ற உறுப்பினர் லொஹா ன் ரத்வத்த, செயலாளர் உதித்த லொக்குபண்டார உட்பட 6 பேர் கொண்ட குழுவும் இந்தியாவுக்குப் பயணித்துள்ளது. இந்தியாவின் பெங்களூர் சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, இன்று இரவில் மீண்டும் நாடு திரும்பவுள்ளதாக அறியமுடிகின்றது. 

கடந்த 10ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்ன ணி 230 வரையிலான சபைகளைக் கைப்பற்றி வரலாற்று சாதனைப் படை த்தது. 

இந்த வெற்றியானது தேசிய அரசிலுள்ள பிரதான இரண்டு கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு பாரிய சவாலை ஏற்படு த்தியதுடன், அக்கட்சிகளிடையே முரண்பாட்டிற்கும் வழியாக அமைந்து ள்ளது. 

இந்த நிலையில் இந்தியாவிலுள்ள ஜோதிடம் மீது அதீத நம்பிக்கை வைத்தி ருக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, அடுத்தகட்ட அரசியல் நக ர்வுகள் தொடர்பில் ஆலோசனை பெறுவதற்காகவே இந்தியாவுக்கு விஜய மாகி உள்ளார் எனத் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.