Breaking News

இலங்கை உட்­பட 16 நாட்டு கடற்படையினரை ஒன்றிணைத்து இந்­தியா போர்ப் பயிற்சி.!

இந்­தியப் பெருங்­க­டலில் சீனாவின் ஆதிக்கம் வலு­வ­டைந்­துள்ள நிலையில், இந்­தியா 16 நாடு­களைச் சேர்ந்த கடற்­ப­டை­யி­னரை இணைத்து பாரிய கடற்­படைப் போர்ப் பயிற்சி ஒன்றை ஆரம்பிக்கவுள்ளது. 

 இப்­ப­யிற்­சி­யா­னது எதிர்­வரும் மார்ச் 6ஆம் திகதி ஆரம்­பிக்­கப்­பட்டு தொட ர்ச்­சி­யாக எட்டு நாட்கள் இடம்­பெ­ற­வுள்­ளது. பிராந்­திய ஒத்­து­ழைப்பை விரி­வாக்­குதல், முக்­கிய கடல் பாதை­களில் சட்­ட­வி­ரோத செயற்­பா­டு­க­ளு க்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்தல் ஆகிய இலக்­கு­களின் அடி ப்­ப­டையில் இக் கூட்டுப் பயிற்சி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 'மிலன் பயிற்சி' என்ற பெயரில் நடத்­தப்­ப­ட­வுள்ள இந்த நட­வ­டிக்கை, அந்­த மான் நிக்­கோபார் கடற்­ப­கு­தியில் இடம்­பெ­ற­வுள்­ளது. 

இக் கூட்டுப் பயிற்­சியில் இலங்கை, அவுஸ்தி­ரே­லியா, மலே­சியா, மாலை­தீவு, மொறி­சியஸ், மியான்மார், நியூ­சி­லாந்து, ஓமான், வியட்னாம், தாய்­லாந்து, தன்­சா­னியா, சிங்­கப்பூர், பங்­க­ளாதேஷ், இந்­தோ­னே­சியா, கென்யா, கம்­போ­டியா ஆகிய நாடு­களின் கடற்­ப­டை­யினர் பங்­கேற்­க­வுள்­ளனர். 

இந்­தியப் பெருங்­கடல் பிராந்­தி­யத்தில் சீனாவின் ஆதிக்கம் வலுப்­பெற்று வரும் நிலை­யி­லே­யே-­அ­தற்கு எதி­ரான ஒரு நகர்­வா­கவே இந்தியா இந்தக் கூட்டுப் பயிற்சியை மேற்கொள்ளவுள்ளதாக அரசியல், இராணுவ விமர்சகர்கள் கரு த்து வழங்கியுள்ளனர்.