Breaking News

தாய் மரணம்; தமிழ் அரசியல் கைதியான தந்தையுடன் சிறைக்கு செல்ல முயன்ற மகள்!

கிளிநொச்சியைச் சேர்ந்த அரசியல் கைதியான தந்தை சிறைச்சாலை வாகன த்தில் ஏறுகையில் அவரது மகளும் தந்தையுடன் சிறைச்சாலை வாகனத்தில் ஏறியுள்ள சம்பவம் அனைவரினது மனதையும் நெகிழ வைத்துள்ளது.


கடந்த 2008 ஆம் ஆண்டு கைது செய்ய ப்பட்டு மகசின் சிறைச்சாலையில் தடு த்து வைக்கப்பட்டு கடந்த வருடம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அர சியல் கைதியான சச்சிதானந்தம் ஆன ந்தசுதாகரனின் மனைவி யோகராணி கடந்த 15 ஆம் திகதி சுகயீனம் காரண மாக மரணமடைந்திருந்தார். இவரின் இறுதி நிகழ்வு இன்று(18) கிளிநொச்சி மருதநகர் கிராமத்தில் நடைபெற்றுள்ளது.

இந் நிகழ்விற்கு பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் ஆனந்தசுதாகர் அழைத்து வர ப்பட்டு மூன்று மணித்தியாலயங்கள் மனைவியின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்த பின் மீண்டும் பொலிஸாரால் சிறைச்சாலை வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளார்.

தந்தை சிறைச்சாலை வாகனத்தில் ஏறிய போது அவரது மகளும் தந்தையுடன் சிறைச்சாலை வாகனத்தில் ஏறியுள்ளார் இச் சம்பவம் அனைவரினது மனதை யும் நெகிழ வைத்துள்ளது.. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதி யான ஆனந்த சுதாகருக்கு மகனும், மகளும் என இரண்டு பிள்ளைகள்.

தந்தை 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட பின்னர் தாயின் அரவணைப்பில் வாழ்ந்த இரண்டு பிள்ளைகளும் தற்போது தந்தையை பிரிந்தும் தாயை இழந்து முள்ளனர்.