Breaking News

ஆனந்தசுதாகரனை விடுதலை செய்யுமாறு வடக்கு முதலமைச்சர் வேண்டுகை! (காணொளி)

ஆயுட்தண்டனை விதிக்கப்பட்டுள்ள அரசியல் கைதியான ஆனந்தசுதாகரனை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யுமாறு வட மாகாண முதல மைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இவ் விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். கிளிநொச்சியைச் சேர்ந்த ஆயுட்த ண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியான ஆனந்தசுதாகரனின் மனைவி அண்மையில் நோய்வா ய்ப்பட்ட நிலையில் உயிரிழந்து ள்ளாா். இதனையடுத்து மனைவியின் இறுதிக் கிரியைகளில் பங்கேற்பதற்கு ஆனந்த சுதாகரனுக்கு மூன்று மணித்தியாலங்கள் சிறைச்சாலை அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனா்.

தாய்க்கான இறுதிக் கிரியையை 10 வயதான மகன் செய்த சம்பவம் அனை வரின் மனதையும் உருக்கிய ஒன்றாக பதிவாகியிருந்ததது. அத்துடன் இறுதிக் கிரியைகளின் பின்னர் தந்தையுடன் 12 வயதான மகள் சிறைச்சாலை பேரூ ந்தில் செல்வதற்கு முயன்ற சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி யுள்ளது.

இந் நிலையில் ஆனந்தசுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ள வட மாகாண முதலமைச்சர், அரசியல் கைதிகளின் சிறுவயது பிள்ளைகளின் நிலைமைக ளையும் அதில் எடுத்துரைத்துள்ளாா்.

இறுதிக் கிரியைகளில் பங்கேற்பதற்கு 3 மணித்தியாலம் மாத்திரம் வழங்கப்ப ட்டதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர், தந்தையுடன் 12 வயது மகள் சிறை ச்சாலை பேரூந்தில் ஏறிச்செல்ல முற்பட்ட போது சிங்கள பொலிஸ் உத்தி யோகத்தர் கண்ணீர் வடித்த சம்பவத்தையும் நினைவு மீட்டியுள்ளாா்.

ஆகவே இரண்டு சிறுபிள்ளைகளின் எதிர்காலத்திற்காக ஆனந்தசுதாகரனை பொது மன்னிப்பு அல்லது மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டுமென வடமாகாண முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

மதம் மற்றும் மனிதாபிமான பின்புலனத்தின் அடிப்படையில் ஆனந்த சுகாதா கரனை விடுதலை செய்யுமாறு முன்வைக்கும் விண்ணப்பத்தை நிராகரிக்க மாட்டீர்கள் என நம்புவதாகவும் சி.வி.விக்னேஸ்வரன் மேலும் சுட்டிக்காட்டி யுள்ளாா்.