Breaking News

எசமானைக் கொல்ல காத்திருந்த கொடூர பாம்பு - அதிர்ச்சிக் காணொளி!

இந்தியாவில் பாம்பு வித்தைக்காரர் ஒருவரை அவரது மலைப்பாம்பு அகோர மாக கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பலர் முன்னிலையில் நடந்த இவ் அனர்த்தம் குறித்த புகைப்படங்களும் காணொளியும் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பர விக் கொண்டிருக்கின்றது.

 மேலும் தெரிவிக்கையில்,

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில த்தில் கடந்த செவ்வாய்க்கிழமை பொது மக்கள் முன்னிலையில் பாம்பு வித்தை ஒன்று காண்பிக்க ஏற்பாடாகியிரு ந்தது. இதன்போது குறித்த பாம்பு வித்தைக்காரர் தனது ஒரு வயது முதிர்ந்த பாம்பை எடுத்து கழுத்திலே போட்டுள்ளார்.

பாம்பின் உடல் பகுதியை ஒரு சுருளாக்கி கழுத்திலே போட்டுக்கொண்ட அவர் அதன் தலையை தனது இடது கையில் பிடித்துள்ளார். இந் நிலையில் குறித்த பாம்பு மெல்ல மெல்ல அவரது கழுத்தை இறுக்கத் தொடங்கியது.

இவ்வேளை பாம்பு சாதாரணமாகத்தான் அவ்வாறு செய்கின்றது என்று கருதிய அவர் ஆரம்பத்தில் எதுவும் செய்யாது விடுகின்றார். ஆனாலும் குறித்த பாம்பு கொலை வெறித்தனத்தோடு அவரது கழுத்தை இறுக்கவுமே அவர் நிலை மையை உணர்கிறார்.

எவ்வாறாயினும் நிலைமை கட்டுமீறிச் செல்லவும் எதுவுமே செய்யமுடியாது அவர் கீழே முகம் குப்புற விழுகிறார். இவை அனைத்தையும் அங்கிருந்த மக்கள் பாம்பு வித்தையின் ஒரு பகுதியே என வேடிக்கை பார்த்துள்ளனர்.

ஆனாலும் கீழே விழுந்த பாம்பு வித்தைக்காரர் மரண வேதனையில் துடி ப்பதை உணர்ந்த மூன்று ஆண்கள் அவரை குறித்த மலைப் பாம்பிடமிருந்து போராடி மீட்டுள்ளனா். 

அத்துடன் அந்த பாம்பு வித்தைக்காரர் மயக்கமடைந்த நிலையில் பிரதேச வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டபோதும் தீவிர சிகிச்சைக்காக வேறொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்துள்ளன. எவ்வாறாயினும் அவரது தற்போதைய நிலை குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.