Breaking News

பிரித்தானியாவில் ஈழத்தமிழ் இளைஞர் கத்தி குத்துக்கு இலக்காகி பலி!

பிரித்தானியாவில் இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் கத்தி குத்துக்கு இலக் காகி உயிரிழந்துள்ளார்.

அருனேஸ் தங்கராஜா எனும் இளை ஞரே மர்ம நபர்களால் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரழந்துள்ளதாக அதி காரிகள் தெரிவித்துள்ளனர். பிரித்தா னியாவில் தெற்கு லண்டனில் அமை ந்துள்ள மிட்சம் பகுதியில் நடைபெற் றுள்ள இச் சம்பவம் அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது.

நேற்று சனிக்கிழமை 28 வயதுடைய அருனேஸ் தங்கராஜா என்ற இளைஞர் , கத்திக்குத்துக்கு இலக்காகிய நிலையில், மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், சிகிச்சை பல னின்றி அவர் உயிரழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித் துள்ளன.

வாழ்வாதாரம் தேடி பிரித்தானியா சென்ற குறித்த இளைஞரின் குடியிருப்புக்கு அருகாமையிலேயே இச் சம்பவம் நடந்துள்ளது. இக் கொலைச் சம்பவம் தொட ர்பில் 44 வயதான சந்தேக நபரை கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித் துள்ளனா். இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை  பிரித்தானிய பொலிசார்  முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.