Breaking News

பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டியது அவசியமாகும்.!

பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை நீக்கி அதற்கு மாற்­றீ­டாக மனித உரி­மை­களை பாது­காக்கும் வகை­யிலும் அதேபோல் தேசிய பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கு­மான சட்டம் கொண்­டு­வ­ரப்­பட வேண்டும்.

கடந்த காலங்­களில் பயங்­க­ர­வா­த த்தை முறி­ய­டிப்­பது என்ற பேரில் பாரிய அளவில் மனித உரிமை மீறல் கள், சித்­தி­ர­வ­தைகள் இடம்­பெற்­றன என இலங்கை மனித உரி­மைகள் ஆணை­யாளர் தெரி­வித்துள்ளாா்.


காணாமல் போனோர் ஆணைக்­குழு உரு­வாக்­கப்­பட்­டதின் பின்னர் வடக்கு கிழக்கு மக்கள் மத்­தியில் நம்­பிக்கை ஏற்­பட்­டுள்­ளது என்று மனித ஆணைக்­கு­ழுவின் தலைவர் தீபிகா உட­கம தெரி­வித்தார். இலங்கை மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழு­வினால் நேற்று அதன் தலைமை அலு­வ­ல­கத்தில் விசேட செய்­தி­யாளர் சந்­திப்­பொன்று ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது. இதில் செய்­தி­யா­ளர்­க­ளிடம் கருத்து தெரிவிக்கும்போதே ஆணைக்­கு­ழுவின் தலைவர் தீபிகா உட­கம இதனைக் குறிப்­பிட்டார்.

மேலும் தெரிவிக்கையில்

இலங்கை மனித உரிமை ஆணைக்­குழு இன்று சர்­வ­தேச மனித உரி­மைகள் தரப்­ப­டுத்­தலில் "ஏ " தரத்­தினை பெற்­றுள்­ளது. இதற்கு கடந்த காலங்­களில் நாட் டில் முன்­னெ­டுக்­கப்­பட்ட மனித உரி­மைகள் சார் நட­வ­டிக்­கை­களே கார­ண­மா கும். 

குறிப்பாக இம்­முறை எமக்கு இந்த அங்­கீ­காரம் கிடைக்க 19ஆம் திருத்தம் மற்றும் ஆணைக்­கு­ழுவின் செயற்­பா­டுகள் என்­பவை கார­ணி­க­ளாக அமைந்­துள்­ளன. மனித உரி­மை­களை பாது­காப்­பதில் எமது செயற்­பா­டுகள் உயர்­வாக உள்­ளன என்­பதை அடை­யாளப்படுத்­தி­யுள்­ளனர். 

எனினும் எமக்கு இன்றும் சில நெருக்­க­டிகள் உள்­ளன. ஆணைக்­குழு அதி­கா­ரிகள், நி்ர்வாகிகள் பற்­றாக்­குறை உள்­ளது. எமக்கு கிடைக்­கப்­பெற்ற முறைப்­பா­டு­களை விசா­ரணை செய்­யக்­கூ­டிய அதி­கா­ரிகள் போதி­ய­ளவு இல்லை. 

நாம் தேசிய ரீதியில் சில நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க வேண்­டி­யுள்­ளது. குறிப்­பாக பயங்­க­ர­வாத தடைச்­சட்டம் நீக்­கப்­படல் அவ­சி­ய­மாகும். மனித உரி­மைகள் ஆணைக்­குழு முன்­வைத்­துள்ள பிர­தான கோரிக்­கை­களில் இதுவும் ஒன்­றாகும். 

பயங்­க­ர­வாத தடைச்­சட்டம் நில­விய உச்­ச­கட்ட காலங்­களில் நாட்டில் பாரிய அளவில் மனித உரிமை மீறல்கள் இடம்­பெற்­றன. தேசிய பாது­காப்பு விட­யத் தில் அக்­கறை இருக்க வேண்டும். அதற்­கான சட்­டங்கள் இருக்க வேண்டும். 

ஆனால் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் இறுக்­க­மான தன்­மைகள் தடுக்­கப்­பட வேண்டும். ஆகவே தான் மாற்று சட்டம் ஒன்­றினை முன்­னெ­டுக்க வேண்­டி­யுள்­ளது. பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தை நீக்­கி­விட்டு அதில் வெற்­றி­டத்தை ஏற்­ப­டுத்த வேண்டும் என நாம் கூற­வில்லை. 

நீக்­கப்­படும் சட்­டத்­திற்கு பதி­லாக தேசிய பாது­காப்பை பலப்­ப­டுத்தும் மாற்று சட்டம் ஒன்­றினை கொண்­டு­வர வேண்டும். ஆனால் கடு­மை­யான தன்­மை­களை நீக்க வேண்டும். உதா­ர­ண­மாக பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் ஒரு­வரை 18 மாதங்கள் நீதி­மன்ற அனு­மதி இல்­லாது தடுத்து வைக்க முடியும். 

அதேபோல் கைது­செய்­யப்­பட்ட நபர் எந்த முறை­யிலும் மனித உரிமை மீற­லுக்கு உள்­ளாக்­கப்­பட கூடாது. அவர் பயங்­க­ர­வாத சந்­தேக நப­ரா­கவோ அல்­லது மரண தண்­டனை கைதி­யா­கவோ இருக்­கலாம். அது முக்­கியம் இல்லை. 

மனித உரி­மைகள் என்­பது அனை­வ­ருக்கும் சம­மா­னது. உரிய விசா­ர­ணை­களும் இடம்­பெற வேண்டும். அதற்கு மாற்று நட­வ­டிக்­கை­களை கையாள வேண்டும். 

கடந்த யுத்த கால சூழலில் பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்ட பலர் மீது கடு­மை­யான சித்­தி­ர­வ­தைகள் இடம்­பெற்­றன என்­பதை மறுக்க முடி­யாது. எனினும் இவற்றை தடுக்க வேண்டும். 

சித்­தி­ர­வ­தைகள் என்­பதை தவிர்த்து புல­னாய்வு மூல­மா­கவும் மன­நிலை சார் மருத்­துவ மற்றும் தொழி­நுட்ப முறை­க­ளிலும் உண்­மை­களை கண்­ட­றிய முடி யும். இதில் புல­னாய்வு துறை­யி­ன­ரது பங்­க­ளிப்பு அதி­க­மாக இருக்க வேண்டும். உலக நாடு­களில் இவற்றை கையாண்டு வரு­கின்­றனர். 

எமது நாட்­டிலும் அதனை கையாள வேண்டும். சில நாடு­களில் மனித உரி­மைகள் மீறப்­ப­டு­கின்­றன அவர்கள் ஆதிக்­கத்தை தக்க வைக்க சித்­தி­ர­வ­தை­களை கையாண்டு வரு­கின்­றனர் என்ற கார­ணத்­தினால் நாமும் மனித உரி­மை­களை மீற­வேண்டும் என்ற கருத்தை ஒரு­போதும் ஏற்­று­கொள்ள முடி­யாது.

கடந்த காலங்­களில் பயங்­க­ர­வா­தத்தை முறி­ய­டிப்­பது என்ற பெயரில் பாரிய அளவில் மனித உரிமை மீறல்கள் இடம்­பெற்­றன. சித்­தி­ர­வ­தைகள் இடம்பெற் றன. அதனை மூடி மறைக்க ஏனையோர் செய்கின்றனர் நாம் செய்தால் என்ன என்ற காரணியை கூறுவதை ஏற்றுகொள்ள முடியாது. 

காணாமல் போனோர் காரியாலயம் உருவாக்கப்பட்டுள்ளமை வடக்கு கிழக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே அவர்களுக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையை உருவாக்க நாம் துரித மாக செயற்பட வேண்டியுள்ளது. 

இதில் காலாவதியான சட்ட முறைமைகளை வைத்துக்கொண்டு இயங்க முடியாது. புதிய சட்டங்களை உருவாக்கி நடவடிக்கைகளை கையாள வேண்டும். 

புதுப்பிக்கப்பட வேண்டும் என்பது கட்டாயம் என்பதை அரசாங்கத்திற்கும் தெரிவித்துள்ளோமெனத் தெரிவித்துள்ளாா்.