Breaking News

தவராசாவின் கேட்ட ரூ7000 அவரது வீட்டு வாசலில்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்காக வடக்கு மாகாண எதிர்க் கட்சி தலைவர் வழங்கிய 7 ஆயிரம் ரூபா நிதியை மீளத் தருமாறு கோரி யிருந்த நிலையில், கிழக்கு பல்கலை க்கழக மாணவர்கள், 7 ஆயிரம் பேரிடம் சேகரிக்கப்பட்ட பணம் எதிர்க் கட்சி தலைவர் சின்னத்துரை தவராசாவின் வீட்டுக்கு முன்னால் இன்று வீசப்பட்டுள்ளது. 

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த வாரம் வீதி வீதியாக உண்டியல் ஏந்தி, தவராசா கோரிய நிதியைச் சேகரித்திருந்தனர். அந்த நிதியை இன்று வட மாகாண சபையில் கையளிக்க முயற்சித்தனர்.

எனினும் அப் பணத்தை பெற்றுக்கொள்ள வடமாகாண சபை மறுத்தது. அத னால் அப் பணத்தை கொக்குவில் பகுதியிலுள்ள வடமாகாண சபை எதிர்க் கட்சி தலைவரின் வீட்டுக்கு சென்று வாசலில் வைத்துவிட்டு சென்றுள்ளனர்.