Breaking News

தூத்துக்குடியில் பொலீசாரது வன்முறை நீடிப்பதாக - திமுக எம்.பி கனிமொழி!

தூத்துக்குடியில் போலீசாரின் வன்முறை இன்றும் தொடர்ந்து கொண்டு வருவ தாக திமுக எம்.பி கனிமொழி சென்னை விமானநிலையத்தில் பேட்டியளித் துள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், தூத் துக்குடியில் இன்றும் பொலீசாரின் வன்முறை தொடர்ந்து கொண்டு வரு கின்றது. வீடு வீடாகச் சென்று அங்கு இருக்கும் பெண்களை தொடர்ந்து அச் சுறுத்தி வருகின்றனர்.

ஸ்டெர்லைட் ஆலையை முழுமை யாக மூடிவிட்டோம் பிரச்சினைகள் பழைய நிலைக்கு வந்து கொண்டு இருக்கின்றது என்று அறிவித்தாலும், தொட ர்ந்து அங்கு வன்முறைகளும் அச்சுறுத்தலும் நடந்து கொண்டு தான் இருக் கின்றது.

சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் அதை பாதுகாக்க வேண்டுமென போராடியவர் கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய என்ன அவசியம் இருக் கிறது? என கேள்வி எழுப்பியதோடு, இந்த அரசாங்கத்தை தொலைந்து கட்டி னால் தான் மக்கள் நிம்மதியாக வாழ முடியுமெனத் தெரிவித்துள்ளாா்.

மேலும், உலக சந்தையில் பெட்ரோல், டீசல் விலை குறைவாக இருக்கும் போது இவர்கள் ஏற்ற வேண்டிய அவசியம் இல்லையெனக் கூறியதோடு, மத் திய அரசாங்கம் விலையை குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? என குற்றம் சுமத்தியுள்ளாா்.