Breaking News

நேபாளத்தில் ஜனாதிபதிக்கு வரவேற்பு.!

பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு விடயமாக வங் காள விரிகுடாவின் வாயில் என்ற பிம்ஸ்டெக் அரச தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேபாளம் புறப்பட்ட  ஜனாதிபதி மைத்ரி பால சிறிசேன நேற்று நண்பகல் கத்மண்டுவில் உள்ள தரிபுவன் சர்வதேச விமான நிலையத்தை அடைந்துள்ளாா். 

ஜனாதிபதியை நேபாளத்தின் பிரதிப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சரு மான ஐஸ்வர் போக்ரெல் (Ishwar Pohkrel) உள்ளிட்ட விசேட பிரதிநிதிகள் குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியுடன் வர வேற்பை நடாத்தியுள்ளனா். 

அந்நாட்டின் பூரண இராணுவ அணி வகுப்பு மரியாதையுடன் ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு வழங்கப்பட்ட துடன், இரு நாடுகளினதும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. ஜனாதிபதி பயணம் செய்த பாதையின் இருமரங்கிலும் இரண்டு நாடுகளினதும் தேசியக் கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளன. 

வரவேற்பு நிகழ்வின்போது ஜனாதிபதியுடன் நேபாளத்தின் பிரதிப் பிரதமர் சுமூகமாக கலந்துரையாடியதுடன் இம்மாதம் 30 மற்றும் 31ஆம் திகதிகளில் நேபாளத்தின் தலைநகர் கத்மண்டுவில் நடைபெறவுள்ள மாநாட்டின் கருப் பொருள் “சமாதானம், சுபீட்சம் மற்றும் பேண்தகு தன்மை வாய்ந்த வங்காள விரிகுடாவை நோக்கி” என்பதாகும். 

பிம்ஸ்டெக் அமைப்பு பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மியன்மார், நேபாளம், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய 07 தெற்காசிய மற்றும் தென்கிழக்காசிய நாடுகளைக்கொண்ட வலயமைப்பாகும். 

இதன் முக்கிய நோக்கம் வங்காள விரிகுடாவை அண்மித்த தெற்காசிய மற் றும் தென்கிழக்காசிய நாடுகளுக்கிடையில் தொழில்நுட்ப, பொருளாதார ஒத் துழைப்பை ஏற்படுத்துவதாகும். 

ஜனாதிபதி 31ஆம் திகதி மாநாட்டில் உரையாற்றவுள்ளார். மாநாட்டுடன் இணைந்ததாக ஜனாதிபதி நேபாள பிரதமர் கே.பீ. ஓலி மற்றும் நேபாள ஜனா திபதி பித்யாதேவி பண்டாரி ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வுள்ளதுடன், இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு புரிந்து ணர்வு உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்படவுள்ளன. 

மேலும் இலங்கைக்கு பொருளாதார சமூக ரீதியான பல்வேறு நன்மைகளை கொண்டுவரும் வகையில் மாநாட்டில் பங்குபற்றும் சில அரச தலைவர்களு டன் ஜனாதிபதி இருதரப்பு பேச்சுவார்த்தைகளை தொடுக்கவுள்ளாா்.