Breaking News

கழிவு நீர் கால்வாயில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை.! (காணொளி)

 நாகரிக சூழலில் மனித வாழ்வின் அடிப்படை கூறான பிற உயிர்களின் மீது அன்பு செலுத்துதல் என்ற பண்பு வெகுவாக குறைந்து வருவதனையே தற் போது நடைபெறும் சம்பவங்களால் உணரமுடிகின்றது. 

கேட்போரை அதிர்ச்சியடைய வைக் கும் சம்பவம் ஒன்று சென்னை - வளசர வாக்கம் பகுதியில் நடைபெற் றுள்ளது. சென்னை, வளசரவாக்கம் எஸ்.வி.எஸ். நகர் 6 வது தெருவி லுள்ள கழிவுநீர் கால்வாயில் நேற்று, தொப்புள் கொடியுடன் பச்சிளங் குழந்தை ஒன்று மிதந்துள்ளது. 

பிறந்து 2 மணி நேரமே ஆன பச்சிளங் குழந்தையின் சடலம் மிதப்பதாக நினை த்து, பலரும் அதை வேடிக்கையாகப் பாா்த்ததுடன், ஒரு பெண்மணி மட்டும், அந்த குழந்தையை கழிவு கால்வாயில் இருந்து தூக்கிய போதுதான்,  உயிர் இருப்பது புலனாகியுள்ளது. 

மேலும் குழந்தையை நீரால் சுத்தம் செய்த பெண், இது தொடர்பாக பொலிஸா ருக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்துக்கு வந்த பொலீஸார், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனா்.

குழந்தை நலமாக இருப்பதாக கூறிய மருத்துவர்கள், சுதந்திர தினத்தில் பிறந்த ஆண் குழந்தைக்கு சுதந்திரம் என பெயர் சூட்டினர். மேலும், குழந்தையின் பெற்றோர் குறித்தும் விசாரணையை முன்னெடுத்துள்ளனா்.