Breaking News

திருகோணமலை - மூதூாில் காதல் ஜோடியை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு!

திருகோணமலை - மூதூர் பகுதியில் பேரூந்தில் பயணித்த காதல் ஜோடியை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

மூதூர் - புளியடி பகுதியில் சற்றுமுன்னர் இச் சம்பவம் நடைபெற்றுள்ளதாக தகவல் கள் வெளியாகியதுடன்  மேலும், மூதூரில் இருந்து திருகோணமலை நோக்கிச் சென்ற தனியார் பேரூந்தில் குறித்த ஆணும் பெண்ணும் பின் ஆசனத்தில் அமர் ந்து சென்றுள்ளனர்.

இதன்போது அடையாளம் தெரியாத நபர்கள் அவர்களை இலக்கு வைத்து வெளியில் இருந்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதில் பேரூ ந்தின் கண்ணாடி மட்டும் உடைந்துள்ளதாகவும், பெண்ணுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத் துப்பாக்கிச்சூடு தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன் னெடுத்துள்ளனா்.