Breaking News

தமிழ் அரசியல் கைதிகளை பொது மன்னிப்பில் விடுவிக்குமாறு - சம்பந்தன்

ஜே.வி.பி. கல­வ­ரங்­க­ளிலும், 1983 கல­வ­ரங்க­ளிலும் கைது செய்­யப்­பட்­ட­வர்­களை பொது மன்­னிப்பில் விடு­வித்­ததை போன்று தமிழ் அர­சியல் கைதி­க­ளை யும் உட­ன­டி­யாக விடு­விக்குமாறு பிர­தமர் - நீதி அமைச்சர் -சட்­டமா அதிபர் ஆகி­யோ­ரு­ட­னான சந்­திப்பில் எதிர்க்­கட்சி தலைவர் சம்­பந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளாா். 

நீண்­ட ­கா­ல­மாக தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­தலை குறித்து தமிழ் தேசியக் கூட்­ட­மைப் பின் தலை­வரும் எதிர்க்­கட்சி தலை­வ­ரு­மான ஆர்.சம்­பந்தன் மற்றும் கூட்­ட­மைப் பின் ஊட­கப்­பேச்­சாளர் எம்.ஏ. சுமந்­திரன் ஆகியோர் நேற்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை அல­ரி­மா­ளி­கையில் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தியுள்ளனா்.

இச் சந்­திப்பில் எதிர்க்­கட்சி தலை­வ­ருடன் நீதி அமைச்சர் மற்றும் சட்­டமா அதிபர் ஆகி­யோரும் கலந்­து­கொண்­டனர். இதன்­போது ஜனா­தி­பதி நாடு திரும்­பி­ய­வுடன் மீண்டும் பேச்­சு­வார்த்தை நடத்தி கைதி­களின் விடு­தலை குறித்து தீர்­மானம் எடுக்­கவும் அரச தரப்பு, எதிர்க்­கட்சி தலை­வ­ருக்கு வாக்­கு­றுதி வழங் கியுள்ளது.