Breaking News

திலீபனின் நினைவேந்தலிற்காக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை இன்று.!

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுக்கு தடை விதிக்கக் கோரி யாழ். பொலிசாரினால், யாழ்.நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இவ் வழக்கில் நினைவேந்தலுக்கு தடை விதிக்கக் கூடாதென நினைவு கூரும் உரிமை உண்டெனக் கோரி, ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமானசிங்கம், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளு மன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தமி ழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் மன்றில் முன்னி லையாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள நிலையில் நீதிமன்ற சூழலில் பலர் கூடியுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.